Showing posts with label Paruthi Pal. Show all posts
Showing posts with label Paruthi Pal. Show all posts

Friday 19 December 2014

பருத்திப் பால்



Paruthi Pal
   In recent times I hear more about Paruthi pal and its benefits. Actually I was searching for the perfect recipe and fortunately I got this recipe in my facebook account which is being shared by Mr. Sridhar Duraisamy (நல்லதையே பகிர்வோம் நலமோடு வாழ்வோம்). I updated his recipe for Paruthi pal here in my blog, hope this will help everyone who search for perfect Paruthi pal preparation.

பருத்திப் பால்ல B காம்ப்ளக்ஸ் சத்து இருக்குங்க. பசி உணர்வை கட்டுப்படுத்தும். நெஞ்சு சளியை குறைக்கும். அதிகமா மூட்டை தூக்கறவங்களுக்கு நெஞ்சில ஒரு வலி வரும் பாருங்க, அந்த நெஞ்சுவலியை கட்டுப்படுத்தும். 25 கிராம் பருத்தி இலையை, 100 மில்லி பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குறையும்.
செய்முறை 1:-
பருத்திக் கொட்டை - 100 கிராம்
பச்சரிசி - 3 டேபிள்ஸ்பூன்
வெல்லம் - 300 கிராம்
சுக்கு - சிறிது அளவு
தேங்காய் துருவல் - தேவையான அளவு
பருத்திக் கொட்டையை நன்கு ஊறவைத்து மிக்சியில் மீண்டும் மீண்டும் அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.
பச்சரிசியை சிறிது நேரம் ஊறவைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
அரைத்த பச்சரிசி மாவை பருத்தி பாலுடன் கலந்து அடுப்பில் ஏற்றி கிளறிக் கொண்டே இருக்கவும்.
பால் கலவை சிறிது கெட்டியாக பொங்கி வரும் போது வெல்லம் கலந்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
வெல்லம் முழுதும் கரைந்தவுடன் சுக்கு, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி சிறிது நேரம் கழித்து இறக்கவும்.
சூடான சுவையான பருத்திப் பால் தயார்.

Note: வெறும் வயிற்றில் பருத்திப் பால் அருந்துவது நெஞ்சுசளிக்கு நல்ல மருந்து.
செய்முறை 2:
கருபட்டியுடன் செய்வது
பருத்தி விதை - 2 கைபிடி
கருப்பட்டி - 100 கிராம்
தேங்காய் பால் - அரை மூடி
சுக்கு - அரைவிரளளவு
அரிசி மாவு - 2 ஸ்பூன்
ஏலக்காய் - 2
பருத்தி விதையை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் ஊறிய விதையை மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுக்க வேண்டும்.
கருப்பட்டியை தூளாக்கி ஒரு கப் தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ளவேண்டும் .ஓரு பாத்திரத்தில் பருத்திவிதை பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும் .
ஒரு கொதி வந்த உடன் கருப்பட்டி பாலையும் தேங்காய் பாலையும் ஊற்றி காய்ச்ச வேண்டும்.
இந்த கலவை கொதிக்கும் போது அரிசி மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து அக் கலவையை கொதிக்கும் பருத்தி பாலில் சேர்த்து கரண்டியால் தொடர்ந்து இரண்டு நிமிடம் கிளறி பாத்திரத்தை இறக்கி விடவேண்டும்.
சுக்கை சிறிது வறுத்து பொடியாக்கி ,ஏலக்காயை பொடியாக்கி இறுதியில் சேர்க்க வேண்டும்.
செய்முறை 3:
சுலபமான + சிக்கனமான +ருசியான + நவீன சேமியா பருத்தி பால்
தேவையான பொருட்கள்:-
100 கிராம் - பருத்தி விதை (நயமானதாக பார்த்து வாங்கவும்)
50 கிராம் - வறுத்த சேமியா
1 / 2 மூடி - தேங்காய்
1 / 4 KG மண்டவெல்லம்
ஏலம், சுக்கு தேவைகேற்ப
உலர்திராட்சை,முந்திரி தேவைகேற்ப
செய்முறை:-
பருத்தி விதையை முதல் நாள் நன்றாக ஊற வைத்து, மறுநாள் நன்கு கழுவி விடவும். பின் பருத்தி விதையை ஆட்டி வடிகட்டி முதல் பால், இரண்டாம் பால் எடுத்து கொள்ளவும். அதில் முக்கால் லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பை பற்ற வைத்து, ஒரு பாத்திரத்தில் இந்த பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அதன் பின் வறுத்த சேமியாவை நன்றாக உடைத்து அதனுடன் சேர்க்கவும். இந்த கலவையை நன்கு கிளறி கொண்டே இருக்க வேண்டும். பிறகு வெள்ளத்தில் தண்ணீர் சேர்த்து நன்கு வடுகட்டி அதனையும் இந்த கலவையுடன் சேர்க்கவும். அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.
ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும், அதில் உலர்திராட்சை, முந்திரி சேர்த்து லேசாக வறுத்து பின், அதனுடன் தேங்காய் சேர்த்து லேசாக வதக்கவும். இளம் பொன்னிறம் வரும் வரை வறுத்து பின் அதை பருத்தி பால் கலவையில் கொட்டி நன்கு கிளறவும். பின் ஏலம், சுக்கு தட்டி போட்டி ஒரு கொதி வரும் போது இறக்கினால் ருசியான சேமியா பருத்தி பால் தயார்.

Thanks to MR.Sridahr Duraisamy (நல்லதையே பகிர்வோம் நலமோடு வாழ்வோம்)

Lemon Rasam

Ingredients Pasiparuppu -  1/4 cup Tomato - 2 nos Rasam powder -2 tspn (If you do not have rasam powder,then u can use crushed pepper co...